Friday 7 February 2014

40 ஆம் ஆண்டு விழா

தஞ்சாவூர், உலகத் திருக்குறள் பேரவையின் 40 ஆம் ஆண்டு விழா, கடந்த 1.2.2014 சனிக் கிழமை மாலை 5.00 மணிக்கு, தஞ்சாவூர், பெசன்ட அரங்கில் சிறப்புடன் நடைபெற்றது.


விழாவிற்கு முன்னதாக,
இசைக் குயில், குறள்நெறிச் செம்மல்,
திருமதி ஜானகி சுப்பிரமணியன் அவர்கள்,
தமிழிசைப் பாடல்களைப் பாடி,
விழாவிற்கு வந்திருந்தோரை தமிழின்பக் கடலில் மிதக்க விட்டார்.


தொடந்து,
திருக்குறள் திரு கூ.மாரிமுத்து அவர்கள்,
திருக்குறள் ஓதினார்.


தமிழிசைச் செல்வி
து.இந்து அவர்கள்
தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடினார்.




உலகத்திருக்குறள் பேரவைச் செயலாளர்,
குறளறச் சுடர்
திரு பழ.மாறவர்மன் அவர்கள்
வரவேற்புரையாற்றினார்,

 

குறள்நெறிச் செம்மல்
புலவர் திரு அரங்க. அறமன்னன் அவர்கள்
அறிக்கை வாசித்தார்.




உலகத் திருக்குறள் பேரவையின், மாநிலத் துணைத் தலைவர்
குறள்நெறிச் செல்வர், பாரிவேள்
திரு சி.நா.மீ.உபயதுல்லா அவர்கள்
தலைமையுரையாற்றினார்.

தொடர்ந்து விருது வழங்கும் விழா நடைபெற்றது.


     
பண்ணாட்டு ரோட்டரி சங்கம், தமிழ் நாடு ஓமியோபதி குழு, தமிழ் நாடு அரசு காசநோய் ஒழிப்புச் சங்கம், மலேசிய அரசு புற்றுநோய் சங்கம் ஆகிய அமைப்புகளில் உறுப்பினராகப் பணியாற்றி வருபவரும், மருத்துவ ஆராய்ச்சியாக ஒன்பது ஆயுர்வேத மருந்துகளைக் கண்டறிந்து, கட்டுரைகள் வரைந்து, மருத்துவ இதழ்கள் வழியாக, உலகிற்கு வழங்கியவரான,
ஹாஜி எல்.கமால் பாட்சா அவர்களுக்கு,
குறள் நெறிச் செம்மல்
விருது வழங்கப் பெற்றது.


     இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழிலும் வல்லவரும், சிறந்த படைப்பாளியும், இசை நாடகத் துறையில் புகழ் மிக்கவரும், தந்தைப் பெரியாரின் முன்னிலையில் அரங்கேறிய சதிகாரி என்னும் நாடகத்தை எழுதியவரும், 21 நாட்டிய நாடகங்களை, தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்கியவருமான,
கவிமுகில் நீடா நா.கோபாலகிருட்டினன் அவர்களுக்கு
குறள்நெறிச் செல்வர்
விருது வழங்கப் பெற்றது.


     வெற்றித் தமிழர் பேரவையின் மாநில துணைப் பொதுச் செயலாளரும், கரந்தை சத்திய நாராயண சித்தர் ஆசிரமம் மற்றும் கோவை பாலரிஷி ஆசிரமங்களின் அறங்காவலரும், சமூக இலக்கியப் பேரவையின் மாவட்டச் செயலாளராய் பொறுப்பேற்று, ஆண்டுதோறும், சிறந்த கவிஞர்கள், தமிழறிஞர்களுக்கு விருது வழங்கிச் சிறப்பித்தும், இலக்கியக் கூட்டங்கள், ஓவியக் கண்காட்சி, புகைப்படக் கண்காட்சி, புத்தகக் கண்காட்சி நடத்தி வருபவருமான,
திரு இரா.செழியன் அவர்களுக்கு
குறள்நெறிச் செல்வர்
விருது வழங்கப் பெற்றது.






உலகத் திருக்குறள் பேரவையின் மாநிலத் தலைவர்
தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள்,
 சிறப்புரையாற்றி, ஆண்டு விழாவினை ஒட்டி, நடத்தப் பெற்ற பல்வேறு போட்டிகளில், பங்குபெற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசில்களை வழங்கிச் சிறப்பித்தார்.

புலவர் திரு ந.சண்முகம் அவர்கள்
விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.


விழா நிகழ்வுகளை 
புலவர் கோ.பாண்டுரெங்கன் அவர்கள்
தொகுத்து வழங்கினார்


புலவர் திருமதி.சா.மல்லிகா அவர்கள்

நாட்டு வாழ்த்துப் பாட விழா இனிது நிறைவுற்றது.

1 comment:

  1. மிக விரிவாகவும் விளக்கமாகவும் பகிர்ந்து இருக்கிறீர்கள் ..வாழ்த்துக்கள் .

    ReplyDelete